Tuesday 11 December 2018

அதிகார துஷ்பிரயோகம்; 2 மணிநேரம் நஜிப் கைது

கோலாலம்பூர்-

1எம்டிபி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சென்ற முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

பிரதமராக பதவி வகித்தபோது தமது அதிகாரத்தை பயன்படுத்தி 1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் மாற்றம் செய்த குற்றஞ்சாட்டின் பேரில் நஜிப் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 11.00 மணியளவில் கைது செய்யப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப் பிற்பகல் 1.21 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

டத்தோஶ்ரீ நஜிப் இன்று விடுவிக்கப்பட்டாலும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் செக்‌ஷன் 23 (1)இன் கீழ் விசாரிக்கப்படுவார் என அறியப்படுகிறது.

No comments:

Post a Comment