Wednesday 12 December 2018

மக்கள் பொறுமை காக்க வேண்டும்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் உதவித் திட்டங்களை போல தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்வதற்கு ஏதுவாக நாட்டின் பொருளாதாரம் வலுபெறும் வரையிலும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டே பல்வேறான மக்கள் நலத் திட்டங்கள் கட்டாயத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்பு நான் நிதியமைச்சராக பதவி வகித்தபோது நாட்டின் பொருளாதாரம் 9 விழுக்காட்டை எட்டியிருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பொருளாதார விகிதாச்சாரம் 45 விழுக்காட்டிலேயே உள்ளது.

பிரபலம் அடைய வேன்டும் என்பதற்காக தேசிய முன்னணி செய்தது போன்று நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். அதனால் நாட்டின் கடன் மட்டுமே அதிகரிக்கும்.

நாட்டின் கடன் அதிகளவு இருப்பதையும் புதிய கடன் பெறுவதையும் நாம் விரும்பவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment