Tuesday 31 October 2017

பள்ளிகளில் குண்டர் கும்பல்; மூடிமறைக்க வேண்டாம்



கோலாலம்பூர்-
பள்ளிகளில் மாணவர்களிடையே நிலவும் குண்டர் கும்பல், பகடிவதை பிரச்சினைகளை மூடிமறைக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

குண்டர் கும்பல் பிரச்சினைகள் கடுமையாக கருதப்படுவதால் இதை தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது போலீஸ் துறையிடம் தெரிவிக்க பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும்.


இதனை மூடிமறைப்பதால் பின்னாளில் அது ஒரு சமுதாய பிரச்சினையாக உருவெடுக்கும். ஆதலால், பள்ளி நிர்வாகங்கள் இப்பிரச்சினை குறித்து புகார் அளிக்க தயக்கம் காட்டக்கூடாது என்றார் அவர்.
 

No comments:

Post a Comment