Saturday 28 October 2017

பெஸ்தினோ: மேல் முறையீடு செய்வோம் - முதலீட்டாளர்கள் சூளுரை

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட  பெஸ்தினோ வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதால அதன் நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் எங்களின் போராட்டம் ஓயாது. இவ்வழக்கை மேல்முறையீடு செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் பேசிய அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதிகளான சோங் யுக் மிங், சோங் குய்க் கே உட்பட நால்வர் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேளையில் தற்போது பங்குகளை வாங்கியது நிறுவனத்திடம் தான். ஆதலால் வழக்கு நிறுவனத்தின் மீதுதான் தொடுக்க முடியுமே தவிர தவிர தனிநபர்கள் மீது அல்ல என தீர்ப்பில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

வழக்கு தொடுக்கப்பட்ட பிரதிவாதிகள் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். ஆதலால் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சாராம்சம்  புரிந்து கொள்ள முடியவில்லை என அவர்  சொன்னார்.

இதனிடையே, இந்த வழக்கை விஜய், கண்ணையா, பாலகிருஷ்ணன், கோபால நாயர்,கோபாலன் ஆகியோர் தொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment