Sunday 29 October 2017

பட்ஜெட் 2018: நோய்கள் மீதான விழிப்புணர்வை துரிதமாக்குக

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மக்களவையில் தாக்கல் செய்துள்ள நிலையில் சுகாதாரத்திற்கான பல ஒதுக்கீடு திட்டங்கள் வரவேற்கக்கூடியதாகும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

இந்த சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டில் நோய்கள் குறித்த விழிப்புணர்வுக்கான சில ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படுவது அவசியமாகும். ஏனெனில் இன்று நோய்க்கான விழிப்புணர்வு மலேசியர்களிடையே குறைவாக உள்ளது.

அதனால்தான் நீரீழிவு நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறு உட்பட பல பிரச்சினைகளுக்கு மலேசியர்கள் இலக்காகின்றனர். நோய்கள் குறித்த விழிப்புணர்வை மலேசியர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.

அதற்கேற்ற வகையில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிதியில் நோய்களுக்கான விழிப்புணர்வை இன்னும் துரிதப்படுத்துவதில் சுகாதார அமைச்சு தீவிரம் காட்ட வேண்டும் என மணிமாறன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment