Thursday 19 October 2017

தித்திக்கும் தீபாவளி மறுமலர்ச்சிக்கு வித்திடட்டும்

ஈப்போ-
தித்திக்கும் தீபத் திருநாள் அனைத்து மலேசியர்களின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும். தீப ஒளியின் பிரகாசம் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி எஸ்.தங்கராணி குறிப்பிட்டார்.

இந்த இனிய திருநாளில் குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் அன்பை பரிமாறி கொள்வதோடு ஒற்றுமையையும் வலுபடுத்தி கொள்வோம்.
ஒற்றுமையே நமது பலம் என்பதால் அந்த ஒற்றுமையை கட்டிக்காக்க இந்தத் தீபத் திருநாள் வழிவகுக்கட்டும்.
ADVERTISEMENT

தீபத் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் என பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி தங்கராணி கூறினார்.

No comments:

Post a Comment