Saturday 15 May 2021

பொதுமக்களிடமிருந்து அல்ல: வர்த்தக தரப்பினரிடமிருந்தே நிதி திரட்டப்படும்- டத்தோஸ்ரீ சரவணன்

 கோலாலும்பூர் -

தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு வர்த்தக நபர்களிடமிருந்து மட்டுமே நன்கொடை திரட்டப்படுமே தவிர பொது மக்களிடமிருந்து அல்ல என்று மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி ஆகிவற்றால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தமிழகத்திற்கு உதவுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப கணிசமான நிதியுதவி வழங்க மஇகா முன்வந்துள்ளது.

ஆனால் இந்நிதி வர்த்தக தரப்பினரிடமிருந்து மட்டுமே நிதி திரட்டப்பட்டு ஜூன் மாத இறுதிக்குள் அந்நிதியை வழங்க மஇகா முடிவெடுத்துள்ளது என்றும் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

No comments:

Post a Comment