Sunday 16 May 2021

இஸ்ரேலின் நடவடிக்கையை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும்- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலகமே ஒரு பெருந்தொற்று நோய் பரவலை எதிர்கொண்டிருக்கும்போது பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின்  நடவடிக்கையை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மக்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது குண்டுகள் வீசப்படுவதும், சுடப்படுவதும் மனிதநேயமற்றவையாகும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான பிராந்தியங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அரசாங்கம் நடத்தும் அட்டூழியங்களை உலகம் வேடிக்கை பார்க்க முடியாது.சியோனிச சமூகத்திற்கு எதிராக அனைத்துலக சமூகம் செயல்பட வேண்டிய நேரமிது என்று தமது முகநூல் பக்கத்தில் மஇகாவின்  துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment