Friday 14 May 2021

உருமாறிய தொற்றுகளுக்கு எதிராக போராட வேண்டும்- டத்தோஶ்ரீ நோர் ஹிஷாம்

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதோடு அதிக தொற்று, மரண எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் திறன் கொண்ட உருமாறிய தொற்றுகளுக்கு எதிராக போராட வேன்டும் என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டட்ர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இன்னும் சில வாரங்களின் தினசரி எண்ணிக்கை ஐந்து இலக்கங்களை எட்டலாம் என கூறிய அவர், ஐக்கிய சிற்றரசு, தென்னாப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளின் உருமாறிய தொற்றுகளினால் நோய் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment