Friday 28 May 2021

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் மரணம்

குளுவாங்-

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலின்போது மரணமடைந்த .கணபதி, எஸ். சிவபாலன் ஆகியோரின் மரணச் சுவடுகள் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்கு முன்பே சிம்பாங் ரெங்காம் சிறையில் தடுத்து  வைக்கப்பட்டிந்த மற்றொரு இந்திய இளைஞர் மரணமடைந்துள்ளார்.

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட 21 வயதான சுரேந்திரன் சங்கர்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை குளுவாங் மருத்துவமனையில் மரணமடைந்ததாக குடும்பத்தினர் தகவலை பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 2020இல் போதைப் பொருள் வழக்கிற்காக பெட்டாலிங் ஜெயாவில் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்ட  சுரேந்திரன் பின்னர் பொக்கா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஆகஸ்ட் மாதம் மூவார் சீர்திருத்த மையத்திற்கு அழைத்து வரப்பட்ட சுரேந்திரனை குடும்பத்தினர் பார்த்தது அதுவே கடைசியாகும் என்றும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சிம்பாங் ரெங்காம் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் தாயார் திருமதி குமதமேரி ஆசீர்வாதம் தெரிவித்தார்.

செய்திகளை வீடியோவில் காண:

'21 வயதே னஆன சுரேந்திரனுக்கு இதுவரை எவ்வித சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததில்லை. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக உணர்கிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.

வயிறு வலி காரணமாக குளுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேந்திரன் 27ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் மரணமடைந்துள்ளார். உடல் உறுப்புகள் செயலிழந்ததன் பாதிப்பின் காரணமாக சுரேந்திரன் மரணமடைந்தார்  என்று குளுவாங் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment