Saturday 1 May 2021

சுங்கை சிப்புட்டில் தமிழர் எழுச்சி விழா

லிங்கா-

சுங்கை சிப்புட்- 

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் தொகுதி  மஇகா, பேராக் தோழமை அமைப்பு ஆகியவற்றின் ஆதரவில் தமிழர் எழுச்சி விழா  நடத்தப்படவுள்ளது.

நாளை 2ஆம் தேதி காலை 8.00 மணிமுதல் சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழர்கள் மொழி, இனம், சமயம், பண்பாடு, அரசியல் மைய கூறுகளுடன் தமிழர் பேரறிஞர்களின் எழுச்சி உரை, தமிழர் தற்காப்பு கலை, வீர விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமை வகிக்கவுள்ளார். 

இலவசமாக நடைபெறும் இவ்விழாவுக்கு பொதுமக்கள் அனைவரும் பண்பாட்டு உடையில் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக் குழு தலைவர் ரா,முருகன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment