Sunday 16 May 2021

மஇகாவை விமர்சிப்பவர்கள் அன்வாரை விமர்சிப்பார்களா?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தமிழக மக்களுக்கு நிதியுதவி செய்யுங்கள் என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி வழங்க முனைந்துள்ள மஇகாவின் நடவடிக்கை விமர்சிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்தியா பேரழிவை சந்தித்து வரும் நிலையில் தமிழகமும் இதில் சிக்குண்டுள்ளது. மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மீட்சி பெற புலம்பபெயர்ந்து வாழும் தமிழர்கள் உதவ வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகாவும் நிதியுதவி அளிக்க முனைந்துள்ளது.

மஇகாவின் இந்நடவடிக்கையை விமர்சிக்கும் சிலர், மலேசிய இந்தியர்களே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்  தமிழக அரசுக்கு மஇகா உதவுவது அவசியம் தானா? என்று கேள்வி எழுப்புகின்றனர். 

 மஇகாவின் மனிதநேய மாண்பு இப்போது தொடங்கப்பட்டதல்ல. முந்தைய காலங்களில் இதுபோன்ற பல மனிதநேய உதவிகளை வழங்கியுள்ள மஇகா, இப்போது தமிழகத்திற்கும் தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன், சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்திற்கு உதவ முனையும்  மஇகாவை விமர்சனம் செய்பவர்கள் பாலஸ்தீன மக்களுக்காக 24 மணி நேரத்தில் 5 லட்சம் வெள்ளி நன்கொடையை திரட்டியுள்ள பிகேஆர் கட்சி தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் செயலை விமர்சிக்க முடியுமா?

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியர்கள் மட்டும்தான் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்களா?, மலாய்க்காரர்கள் ஒருவரும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல்தான் வாழ்கிறார்களா? என்று வீரனும் மணிமாறனும் தங்களது ஆதங்கத்தை முன்வைத்தனர்.


No comments:

Post a Comment