Friday 28 May 2021

தமிழக நிவாரண நிதி மிண்டாஸ் சங்கம் வெ.10,000 நன்கொடை; டத்தோ மோகனிடம் வழங்கப்பட்டது

 கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தமிழக மக்களுக்கு உதவிடும் நோக்கில் மஇகா தொடங்கியுள்ள நிவாரண நிதிக்கு மிண்டாஸ் எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தின்  சார்பில் 10,000 வெள்ளிக்கான காசோலையை மஇகாவின் உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகனிடம் அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திரன், செயலாளர் ராஜசேகரன், கணேசன், கணபதி, ஜெயபாலன் ஆகியோர் வழங்கினர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலும் தமிழக மக்களுக்கு உதவ முன்வந்த மிண்டாஸ் சங்கத்திற்கு நன்றி கூறி கொள்வதாக டத்தோ மோகன் குறிப்பிட்டார்.


செய்திகளை வீடியோவாக காண:



No comments:

Post a Comment