Saturday 15 May 2021

போலீசார் மீது பட்டாசு வீச்சு- மூவர் கைது

 கோலாலம்பூர்-

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தது மட்டுமல்லாது அதனை போலீசாரை நோக்கி வீசிய சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் உட்பட மூவரை  போலீசார் கைது செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 11ஆவது மாடியிலிருந்து தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து விளையாடிய 12,13,44 ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் 13 வயது ஆடவனிடமிருந்து 48 வகையான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் தெரிவித்தார்.

அதே குடியிருப்பில் இரவு 11 மணியளவில் லைசென்ஸ் இன்றி பட்டாசுகளை விநியோகம் செய்த 58 வயது ஆடவர் கைது செய்த போலீசார்130 வகையான பந்து பட்டாசுகளை வாண வெடிகளையும் கைப்பற்றினர் என்றார் அவர்.

No comments:

Post a Comment