Saturday 15 May 2021

வீட்டிலேயே இருங்கள்; தடுப்பூசி அட்டவணையை மாற்றம் செய்யலாம்- கைரி ஜமாலுடின்

 கோலாலம்பூர்-

கோவிட்-19  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கான தடுப்பூசி திட்ட அட்டவணையை மாற்றம் செய்துக் கொள்ளலாம் என்று அறிவியல், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இத்தகைய நபர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள், உங்களுக்கான தடுப்பூசி அட்டவணையை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறிய தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கைரி ஜமாலுடின், தடுப்பூசி போட வரும் இத்தகைய நபர்களால் மேலும் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment