Sunday 16 May 2021

கண்பார்வையிழந்த குமாரி லோகேஸ்வரிக்கு மனிதநேய உதவி

ரா.தங்கமணி

கிள்ளான்-

பணிநேரத்தின்போது ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை, மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்ட குமாரி லோகோஸ்வரிக்கு பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கணிசமான நிதியுதவியை வழங்கியுள்ளார்.

கண்பார்வை பாதிக்கப்பட்ட குமாரி லோகேஸ்வரியின் பிரச்சினை தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவருக்கு சிலாங்கூர் மாநில அரசின் மருத்துவ உதவித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பண்டார் பாரு கிள்ளான் இந்திய சமூகத் தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் கூறினார். 

சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்ந்து வரும் தனது தாயாருடன் வசித்து வரும் லோகேஸ்வரிக்கு உதவும் நோக்கில் டத்தோ தெங் சாங் கிம்மின் நிதியுதவிக்கான காசோலையை அவரின் உதவியாளர் சரவணன் வழங்கினார்.


கிள்ளான் நா
டாளுமன்ற உறுப்பினரின் நிதியுதவி திட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இவரின் பிரச்சினையை தனது கவனத்திற்கு கொண்டு வந்த சிலாங்கூர் இந்து சங்கத்தின் தலைவர் முனியாண்டி, மோரிப் இந்திய சமூக தலைவர் ருசேன் ஆகியோருக்கு நன்றி கூறி கொள்வதாக அருள்நேசன் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment