Sunday 16 May 2021

சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படுவது எப்போது? மாமன்னர், சுல்தானிடம் அதிகாரம் ஒப்படைப்பு

கூச்சிங் 

சரவாக் மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா, மாநில சுல்தான் அப்துல் தாய்ப் மாமுட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஜிபிஎஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜூன் 6ஆம் தேதியுடன் மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு காலம் பூர்த்தியடைகிறது. ஆனால் அவசரகால சட்டம் நடப்பில் உள்ளதால் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அனுமதிக்கப்படாது.

மாநில சட்டமன்றத் தேர்தல் எப்போது நடத்துவது என்ற தீர்க்கமான முடிவை மாமன்னரும் மாநில சுல்தானும் எடுப்பர் எனும் அடிப்படையில் இம்முடிவு அவ்விருவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஜிபிஎஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

No comments:

Post a Comment