Thursday 6 May 2021

கோவிட்-19 தொற்று தினசரி 5,000ஆக உயரலாம்- இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்-

விரைவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது SOP-களை மக்கள் கடைபிடிக்க தவறினால் கோவிட்-19 பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினசரி 5,000ஆக உயரும் அபாயம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கோவிட் தொற்று பரவலை தடுக்க தவறினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி 10,000ஆக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

அத்தகைய சூழல் ஏற்பட்டால் இந்தியா எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மலேசியாவும் எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியாவில் ஏற்படுவதை போன்று தெருக்களில் மக்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் இக்கட்டான சூழலை நாம் பார்க்க விரும்பவில்லை. ஆகவே கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது என்று சுகாதார அமைச்சுடனான சந்திப்பின்போது இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment