Saturday 15 May 2021

இந்தியாவிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் 21ஆக உயர்வு

 கோலாலம்பூர் -

இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை புரிபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்களை 14இல் இருந்து 21 நாட்களாக அரசாங்கம் நீட்டித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்த 132 பேரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வீரியமிக்க உருமாறிய இந்திய தொற்று நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment