Saturday 15 May 2021

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெ.5 லட்சம் திரட்டினார் டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

இஸ்ரேல் வான் தாக்குதலில் அவதியுற்று வரும் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பொருட்டு பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 லட்சம் வெள்ளி நிதி திரட்டியுள்ளார்.

24 மணிநேரத்திற்குள்ளாகவே இந்நிதியை திரட்டியுள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த நிதியை தானும் பிற பிகேஆர் கட்சி உறுப்பினர்களும் திரட்டியுள்ளது போல மற்ற உள்நாட்டினரும் வெளிநாட்டு இயக்கங்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று சொன்னார்.



No comments:

Post a Comment