Saturday 15 May 2021

தினந்தோறும் சந்தைக்கு செல்ல வேண்டாம்- பி.ப.சங்கம்

 பினாங்கு-

காய்கறி, கோழி, மீன் ஆகியவற்றை வாங்குவதை வாங்க தினந்தோறும் சந்தைக்கு செல்வதை மக்கள் குறைத்துக் கொண்டாலே கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுவதை குறைக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் குறிப்பிட்டார்.

ஒருமுறை சந்தைக்கு செல்லும்போதே 3 அல்லது 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்  கொண்டால் தினந்தோறும் சந்தைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதன் மூலம் கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகமாவது குறைக்க முடியும் என்ற அவர், சந்தைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்பதால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது என்றார் அவர்.


No comments:

Post a Comment