Wednesday 5 May 2021

சிலாங்கூரில் எம்சிஓ- குழப்பத்தில் மக்கள்?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

நாளை தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் எம்சிஓ எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கோம்பாக், உலு லங்காட்,பெட்டாலிங், கிள்ளான், கோல லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் நாளை 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை எம்சிஓ அமலில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஆனால் 6ஆம் தேதி அமல்படுத்தப்படும் எம்சிஓ-வுக்கான எஸ்ஓபி நடைமுறைகள் தெளிவாக விளக்கப்படாதது மக்களிடையே குழப்பத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட எம்சிஓ 1, எம்சிஓ 2 ஆகிவற்றுக்கு தெளிவான எஸ்ஓபி விதிமுறைகள் வழங்கப்பட்ட நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்காக எஸ்ஓபி விதிமுறைகள் என்ன? என்பது குறித்து மக்கள் குழம்பி போயுள்ளனர்.

No comments:

Post a Comment