Saturday 15 May 2021

தமிழக மக்களுக்கு உதவ வேண்டியது மஇகாவா? மலேசிய அரசாங்கமா?- ராய்டு கேள்வி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வேலை இழந்து வருமானம் இன்றி அல்லல்படும் மலேசிய இந்தியர்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு உதவுதான் மஇகாவின் தலையாய கடமையா? என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் ஆலோசகர் வீ.பாப்பராய்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவிட்-19 தொற்றால் அபாய சூழலை எதிர்கொண்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும்படி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதியுதவி கோரியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று உதவ வந்துள்ள மஇகாவின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். 

ஆனால் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு மலேசிய அரசாங்கத்தின் வாயிலாக உதவி புரிவதை மஇகா மேற்கொள்ளலாமே?  

ஓர் அரசியல் கட்சியாக மஇகா தமிழக மக்களுக்கு உதவுவதை காட்டிலும் அரசாங்க பிரதிநிதியாக மஇகா திகழலாமே?அதே வேளையில் தமிழக மக்களுக்கு  கணிசமான நிதியுதவியை செய்ய தயாராக இருக்கும் மஇகா, அதை இங்குள்ள இந்தியர்களுக்கு கொடுத்து உதவலாமே? என்று பாப்பராய்டு கூறினார்.

No comments:

Post a Comment