Wednesday 28 June 2017

பயணிகளை பிரார்த்திக்கச் சொல்வதா? விமானியின் செயல் கண்டிக்கத்தக்கது


கோலாலம்பூர்-
இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளை 'இறுதியாக பிராத்திக்கும்படி' கேட்டுக் கொண்ட விமானியின் செயலை முன்னாள் அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம் வன்மையாக கண்டித்தார்.

நேற்று ஆஸ்திரேலியா, பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம் இயந்திர கோளாறு ஏற்பட்டு சலவை இயந்திரம் போல் குலுங்கியது. இதனால் அவ்விமானம் மீண்டும் பெர்த் நகருக்கே திரும்பி பத்திரமாக தரையிக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்த விமானியின் செயலை விமானம் நிறுவனம் ஏற்கக்கூடாது எனவும் மரணம் நெருங்கி விட்டது போன்ற தோற்றத்தை அந்த விமானி ஏற்படுத்தியிருக்கக்கூடாது எனவும்  டத்தோ ஸைட் கூறினார்.


No comments:

Post a Comment