Tuesday 20 June 2017

பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை - டத்தோஶ்ரீ அன்வார்


கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளர்கள் என்ற நிலையை தாம் ஏற்கப்போவதில்லை என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதே நம்பிக்கைக் கூட்டணியின் இலக்காக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவகாரம் இக்கூட்டணியை சோர்வடைய வைக்கிறது.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால், தாம் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை எனவும் தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயலாற்ற வேண்டும்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் விவாதங்களை சுட்டிக் காட்டிய அவர், இவிவகாரத்தை வாக்காளர்களின் விருப்பத்திற்கே விட்டு விடலாம் என டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment