Thursday 15 June 2017

' நவீன் மரணம்- குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்'


கோலாலம்பூர்-
பகடிவதை செய்து கடுமையாக தாக்கப்பட்ட நவீனின் மரணத்திற்கு  காரணமாக இருந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை முன்னாள் பள்ளி மாணவர்களால் பகடிவதைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நவீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் நினைவு திரும்பாமலேயே இன்று மாலை மரணமடைந்தார்.

மலேசியர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நவீனின் மரணத்திற்கு தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துக் கொண்ட பிரதமர் நஜிப், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment