Tuesday 6 June 2017

சிறுமியை தாக்கிய மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்!


கோலாலம்பூர்-
6 வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய இந்திய மூதாட்டிக்கு 7 நாட்களுக்கு தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டை கீழே சிந்தியதற்காக சிறுமியின் பாட்டி என நம்பப்படும் மூதாட்டி  முரட்டுத்தனமாகஅச்சிறுமியை குச்சியை கொண்டு கடுமையாக தாக்கும் வீடியோ காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து பூச்சோங்கிலுள்ள அந்த மூதாட்டி நேற்று இரவு கைது செய்யப்பட்ட வேளையில்   7 நாட்களுக்கு அந்த மூதாட்டி தடுத்து வைக்கப்படவுள்ளார்.

சமூக ஊடக பயனர்களிடையே ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த காணொளியின் விளைவாக பொதுமக்கள் அந்த மூதாட்டியின் வீட்டின் முன் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment