Friday 16 June 2017

நவீன் மரணம்: கொலை குற்றமாக மாறுகிறது விசாரணை - ஐஜிபி தகவல்


கோலாலம்பூர்-
மூளைச் சாவடைந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தி.நவீன் (வயது 18) மரணமடைந்ததைத் தொடர்ந்து இவ்விசாரணை கொலை குற்றமாக கொலை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.

பகடிவதைக்கு உள்ளாகி பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நவீன் நேற்று மாலை 6.00 மணியளவில் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கலகம் செய்தல், பொருட்களின் மூலம் பாலியல் வன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்விசாரணை குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்படவுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு கட்டாய மரணத் தண்டனை விதிப்பதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

கடந்த சனிக்கிழமை ஐவர் கொண்ட கும்பலால் நவீன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைபட்ட இந்த ஐவரில் மூவர் எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்கள் எனவும் இருவர் ஐந்தாம் படிவ மாணவர்கள் எனவும் டான்ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment