Thursday 29 June 2017

பேருந்து விபத்து: இருவர் பலி


உலு சிலாங்கூர்-
26 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

பெர்லிஸ் மாநிலத்திலிருந்து ஜோகூர் நோக்கி வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது புக்கிட் பெருந்தோங் அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஓட்டுனர் எம்.அரசு (வயது 47),  மசீனா (வயது 46) ஆகியோர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒரு பயணி சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உலு சிலாங்கூர் ஓசிபிடி ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தெரு விளக்கு இல்லாத பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது இவ்விபத்து நடந்ததாகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டி மரணம் விளைவித்த காரணத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987இன் கீழ் இவ்விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment