Tuesday 27 June 2017

வானொலி வாசகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மின்னல் எப்.எம்


கோலாலம்பூர் ஜூன்-
ஒவ்வோரு ஆண்டும் தந்தையர் தினத்தன்று நாட்டின் முன்னணி வானொலிகளில் ஒன்றான மின்னல் பண்பலையில் வித்தியாசமான நிகழ்வு நடத்துவர். இம்முறை சற்று மாறுபட்டு பல நிகழ்ச்சிகளும் போட்டிகளும் படைத்தனர்.

அதில் தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஆச்சரிய தொலைப்பேசி அழைப்பும் ஒன்றாகும். இப்போட்டியின் தொடக்கத்தில் சுமார் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆச்சரிய அழைப்புகள் கொடுக்கப்பட்டன.

நிகழ்வின் சில காட்சிகள்

பூச்சோங்கை சேர்ந்த நந்தினி பாரதிதாசன் சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தந்தையர் தினத்தன்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின்னல் அறிவிப்பாளர்கள் மோகன் மற்றும் தியா அவருடைய வீட்டிற்கு சென்று தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.


அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் மின்னல் எப்.எம் சிறப்பு அன்பளிப்பை அவர்களுக்கு மின்னல் எப்.எம் அறிவிப்பாளர்கள் மோகன் தியா அவர்களுக்கு வழங்கினர். சற்றும் எதிர்பாராமல் மின்னலோடு கொண்டாடப்பட்ட இந்த வருட தந்தையர் தினத்தை தனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது என நந்தினியின் தந்தை பாரதிதாசன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டர்.

No comments:

Post a Comment