Friday 9 June 2017

கங்கை அமரனின் ‘என் இனிய பொன் நிலாவே'


ஆல்சீஸன் இவண்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டில் தென்இந்தியா சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் ‘என் இனிய பொன் நிலாவே' எனும் இசை நிகழ்ச்சி நம் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மைசூரி குழுமமும் பெரி இவண்ட் மேனேஜ்மென்ட்டும் இந்நிகழ்வின் முதன்மை ஆதரவாளர்கள் ஆவர். இந்நிகழ்வில், இசைஞானி இளையராஜா - கலைஞானி கங்கை அமரன் இசைப் பயணங்கள் எனும் கருப் பொருளோடு இந்த நிகழ்வு முதன் முறையாக மலேசியாவில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 29ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல பாடகர்களும் சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து மேல் விவரங்களுக்கு, 016-6191786 அல்லது 011-23888603 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment