Friday 30 June 2017

கடப்பிதழை தொலைத்தால் அபராதம் - குடிநுழைவுதுறை கோரிக்கை



புத்ராஜெயா-
கடப்பிதழை (பாஸ்போர்ட்) தொலைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு வெ.200 முதல் வெ.1000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என குடிநுழைவுதுறை இலாகா கோரிக்கை விடுத்துள்ளது.

மை கார்ட்டை தொலைத்தால் அதனை புதுப்பிப்பதற்கு அபராதம் செலுத்துவதை போல கடப்பிதழை தொலைத்தால் அதனை புதுப்பிப்பதற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அதன் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தஃபார் அலி தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை 31,287 பேர் தங்களது கடப்பிதழை தொலைத்துள்ளனர்ஆனால் கடப்பிதழை தொலைப்போருக்கு எதிராக எவ்வித அபராதமும் இதுவரை விதிக்கப்படவில்லை. இந்த கோரிக்கையின் வழி புதிய சட்டமான முதல் முறையாக கடப்பிதழை தொலைபோருக்கு 200 வெள்ளியும், இரண்டாவது முறையாக தொலைபோருக்கு 500 வெள்ளியும் மூன்று முறைக்கு மேல் தொலைபோருக்கு 1000 வெள்ளியும்  அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தண்டனை அல்ல; மாறாக கடப்பிதழ் உரிமையாளர்களிடையே பொறுப்புணர்வை மேலோங்க செய்வதற்கான நடவடிக்கையாகும் என் அவர் குறிப்பிட்டார்.

31,287 மலேசிய கடப்பிதழ்கள் காணாமல் போயுள்ளதாக செய்யப்பட்டுள்ள புகாரில் 22,475 புகார்களில் 'எங்கே வைத்தேன் என்பது நினைவில்லை' எனவும் 2,852 புகார்களில் 'வீடு மாறும்போது தொலைந்து விட்டது' எனவும் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும் பொது வாகனங்களில் வைத்து விட்டேன், கைப்பை, பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது, திருடப்பட்டது, கொள்ளையிடப்பட்டது, வீடு மாறும்போது- தீச்சம்பவத்தின்போது தொலைந்து விட்டது, இயற்கை பேரிடர் போன்றவற்றையும் காரணங்களாக கூறுகின்றனர்.

மை கார்ட்டை தொலைத்து விட்டால் முதல் முறையக 100 வெள்ளியும் இரண்டாவது முறையாக 300 வெள்ளியும் மூன்று முறைக்கு மேல் 1000 வெள்ளியும் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment