Friday 30 June 2017

'ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்' முற்றாக துடைத்தொழிக்கப்படும் - லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அனைத்துலக அரங்கில் தற்போது மலேசியாவிலும் நிலவும் 'ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்' என்ற தோற்றம் முற்றாக துடைத்தொழிக்கப்படும் என ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் அனைவரிடத்திலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மே மாதத்திற்குள் நடைபெறலாம்.

அக்டோபரில் சீன அதிபர் சீ ஜின் பிங் மலேசியாவுக்கு வருகை புரியவுள்ளார்சிறையிலிருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2018 ஜூன் மாதத்திற்குள் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதலால் அக்டோபர் மாதத்திற்கு முன்பும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு பின்னரும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழல் இல்லாததால்  குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

'அன்வாருக்கு மாமன்னரிடமிருந்து மன்னிப்பு கிடைத்து அதன் மூலம் முழு விடுதலை கிடைத்து அவரால் மீண்டும் போட்டியிட முடியுமாஎன்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் அவர் சிறையிலிருந்து வெளியாகி, அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தேசிய  முன்னணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக சார்ந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவது மக்களின் கைகளில்தான் உள்ளது. பக்காத்தான் ஹராப்பான் வெற்றியடைந்தால் மலேசியாவில் மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும் என லிம் கிட் சியாங் கூறினார்.


No comments:

Post a Comment