Friday 16 June 2017

'லட்சிய இளைஞனை நாடு இழந்துள்ளது' - ஐஜிபி காலிட்


கோலாலம்பூர்-
18 வயதான தி.நவீன் மரணமடைந்தன் மூலம் 'லட்சிய இளைஞனை நாடு இழந்துள்ளது' என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

நவீனின் மரணம் எனக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. அந்த இளைஞனின் குடும்பம் அடைந்துள்ள துன்பத்தை ஒரு தந்தையாக மிகப் பெரிய துயரமாக உணர்கிறேன்.

'அவரது குடும்பம் ஒரு மகனை இழந்திருக்கலாம். ஆனால் இந்நாடு ஒரு லட்சிய இளைஞனை இழந்துள்ளது'.  நவீனுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என டான்ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை 'ரோல் மாடலாக' கொண்ட நவீன், இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment