Monday 26 August 2019

'காட்' விவகாரம்: ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்; தீர்வு காண்கிறோம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள 'காட்' விவகாரத்திற்கு உரிய தீர்வு காண முடியவில்லையென்றால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். அதற்கான தீர்வை நாங்கள் காண்கிறோம் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.
தாய்மொழிப் பள்ளிகளில் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 'காட்' அரேபிய மொழியை அடுத்தாண்டு முதல் அமல்படுத்த பக்காத்தான் அரசாங்கம் முனைப்பு காட்டுகிறது.

அத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் அத்திட்டத்தை அறிமுகம் செய்ததே தேசிய முன்னணி அரசாங்கம்தான் என பழி போடுகின்றனர்.

தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த பல திட்டங்களை மாற்ற தெரிந்த பக்காத்தான் அரசாங்கத்திற்கு 'காட்' திட்டத்தை மாற்ற, நிராகரிக்க தெரியாதா?
ஜிஎஸ்டியை எஸ்எஸ்டியாகவும் பிரிம் திட்டத்தை பிஎஸ்எச் திட்டமாகவும் மாற்றியது பக்காத்தான் அரசாங்கம்.

ஆனால் 'காட்' அரேபிய மொழி திட்ட அமலாக்கத்தில் தீர்வு காண தெரியாமல் மக்களை குழப்பி கொண்டிருப்பதை விட ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். அதற்குரிய தீர்வை நாங்கள் காண்கிறோம் என்று விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment