Tuesday 20 August 2019

சுகாதார இலாகாவின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ ஜெயந்திரன் மரணம்

கோலாலம்பூர்-

சுகாதார இலாகாவின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.ஜெயந்திரன் இன்று காலை மரணமடைந்தார்.
சுகாதார இலாகா இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூலில் பதிவிட்டுள்ள இரங்கலில், 2013 மார்ச் முதல் கடந்தாண்டு மே மாதம் வரை டத்தோஶ்ரீ ஜெயந்திரன் சுகாதார இலாகாவின் துணை இயக்குனராக பணியாற்றினார்.

இன்று காலை மரணமடைந்த அன்னாரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், நாங்கள் அனைவரும் மிகவும் நேசித்த ஒருவரை இழந்து விட்டோம். அமைச்சின் பணியாளர்கள், நண்பர்கள் அனைவரும் மிகுந்த துயரம் கொண்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

சுகாராத இலாகாவின் துணை இயக்குனர் உட்பட 38 ஆண்டுகள் டத்தோஶ்ரீ ஜெயந்திரன் பணியாற்றியதோடு கோலாலம்பூர் மருத்துவமனையின்  நிபுணத்துவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.


No comments:

Post a Comment