Saturday 24 August 2019

'புரட்சி' பேரணி ஏற்பாட்டாளர்கள் கைது

கோலாலம்பூர்-
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழி திணிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட 'புரட்சி' பேரணி ஏற்பாட்டாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று பிரிக்பீல்சில் நடத்தப்பட்ட ' புரட்சி' பேரணிக்கு உரிய அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில் இதன் ஏற்பாட்டாளர்களான உமாகாந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

'புரட்சி' பேரணி நடத்தப்பட்டது தொடர்பிலான விளங்கங்களை பெறவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அரிஃபை தராவே தெரிவித்தார்.

இந்த பேரணியில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் சுமூகமான முறையில் நடந்தேறியது என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment