Sunday 18 August 2019

மன்னிப்பு கேட்க மாட்டேன்; நீதிமன்றத்தில் சந்திக்கலாம்

ஷா ஆலம்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கிடம் தாம் மன்னிப்பு கோரப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.
தமக்கெதிராக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஸாகீர் நாய்க் தனக்கு காலக்கெடு விதித்துள்ளார். 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் விதித்துள்ள கோரிக்கையை நிராகரிக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் அதனை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்
என்று ஸாகீர் நாய்க்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குலசேகரன் தெரிவித்தார்.

தம்மீது குறித்து அவதூறான கருத்து வெளியிட்டதாக குலசேகரனுக்கு எதிராக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஸாகீர் நாய்க் 48 மன்னிப்பு கோர வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார்.

No comments:

Post a Comment