Monday 19 August 2019

குலசேகரன் உட்பட 5 பேருக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப்படும்- ஸாகீர் வழக்கறிஞர்

கோலாலம்பூர்-
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உட்பட ஐவருக்கு எதிராக சம்மன் நோட்டீஸ் நாளை அனுப்பப்படும் என்று ஸாகூர் நாய்க்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் மீது அவதூறான அறிக்கைகள் விடுத்த ஐவர் மீது நாளை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காடிர் தெரிவித்தார்.

தம்மீது அவதூறான அறிக்கை விடுத்ததன் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு இந்த ஐவருக்கும் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து சம்மன் அனுப்பப்படவுள்ளது.

மனுதவள அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ், கனடாவுக்கான மலேசிய முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இன்திதஸ் ஆகியோர் மீதே ஸாகீர் நாய்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment