Wednesday 21 August 2019

முஸ்லீம் அல்லாதோரிடையே மன்னிப்பு கோருகிறேன்- ஸாகீர் நாய்க்

கோலாலம்பூர்
தாம் நிகழ்த்திய உரை முஸ்லீம் அல்லாதோரிடையே மன கசப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் கருத்து தெரிவித்திருந்தார்.
கிளந்தானில் தாம் ஆற்றிய உரை இஸ்லாம் சார்ந்த விவகாரம் ஆகும். ஆயினும் அந்த உரையில் முஸ்லீம் அல்லாதோர் குறித்து தெரிவித்த கருத்துகள் தம்முடைய சொந்த கருத்துகள் ஆகும்.

இந்த கருத்துகள் முஸ்லீம் அல்லாதோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது தொடர்பில் அதற்கு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஸாகீர் நாய்க் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அண்மையில் கிளந்தானில் உரை நிகழ்த்திய ஸாகீர் நாய்க், மலேசிய இந்தியர் இந்நாட்டு பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமருக்கு 100 விழுக்காடு விசுவாசம் மிகுந்தவர்களாக உள்ளனர் என்று கூறியதற்கு ஒட்டுமொத்த மலேசியர்களும் தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

அதோடு, தன்னை போல் இந்நாட்டிற்கு வந்துள்ள 'பழைய விருந்தாளிகளான' சீனர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஸாகீர் நாய்க் கூறியது சீனர்களின் கண்டனத்திற்கு ஆளானது.

No comments:

Post a Comment