Sunday 18 August 2019

குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? கோமாளித்தனமானது- கணபதிராவ்

கோ.பத்மஜோதி

ஷா ஆலம்-
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் விடுத்துள்ள கோரிக்கை 'கோமாளித்தனமானது' என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் விசுவாசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தது ஸாகீர் நாய்க் தான். அவர்தான் இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கோர வேன்டும்.

மாறாக, ஸாகீர் நாய்க்கிடம் குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டியதில்லை. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் குலசேகரன் அஞ்சப்போவதில்லை. அவர் இதற்கெல்லாம் அடிபணியப் போவதும் இல்லை.

குலசேகரன் எங்கேயும் ஓடி ஒளியப்போவதில்லை. இந்திய சமுதாயத்தை இழிவுபடுத்திய ஸாகீர் நாய்க் தான் எங்கேயாவது ஓடி ஒளிய வேண்டியிருக்கும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment