Friday 9 August 2019

‘காட்’ தொடரும்; தேர்வில் இடம்பெறாது- கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-
‘காட்’ எனப்படும் அரேபிய சித்திர மொழி அடுத்தாண்டு தேசிய மொழி பாடத்தில் தொடரும். ஆனால் அது தேர்வில் இடம்பெறாது என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் இனி இது குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டாம் எனவும் அவர் சொன்னார்.

இது பாடத்திட்டம் அல்ல. ,மாறாக இது செயல் நடவடிக்கையே ஆகும் என்று அவர் மேலும் சொன்னார்.


அடுத்தாண்டு முதல் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேசிய மொழி பாடத்தின்போது ‘காட்’ சித்திர மொழி பயிற்றுவிக்கப்படும் என அண்மையில் வெளியான தகவல் முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியதோடு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment