Friday 30 August 2019

இந்திய கல்லூரி மாணவர்கள் கணபதிராவை சந்திந்தனர்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசியாவுக்கு குறுகிய கால கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா, சென்னை கலை கல்லூரி, Auxilium கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவைச் சந்தித்தனர். 
Royal Commonwealth அமைப்பும் Audacious Dreams Foundation அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, தாம் வகிக்கும் பதவிகளின் பொறுப்புகள் ஆகியவற்றை கணபதிராவ் விவரித்தார்.

அதோடு, இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான வர்த்தக உறவுகள், வர்த்தக வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிக தொடர்பு,  மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சூழல் போன்றவற்றை எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்காக சிலாங்கூர் மாநிலத்தை தேர்ந்தெடுத்ததற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு செயலகத்திற்கு வருகை தந்த இம்மாணவர்கள், பேராசிரியர்களுக்கு மாநில துணை சபாநாயகர் டார்கட் டரோயா அல்வி சட்டமன்ற அவை நடைமுறைகளை விவரித்தார்.

தினேஷ் கஜேந்திரன் தலைமையில் 44 பேர் (பேராசிரியர்கள் உட்பட) இந்த கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள இவர்களின் கல்வி சுற்றுலா பயணம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை அமையவுள்ளது. 

மேலும். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய கிராமத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment