Wednesday 21 August 2019

ஜாவி மொழிக்கு பெ.ஆ.சங்கங்கள் எதிர்ப்பு காட்ட வேண்டும்- இந்திய சமூகத் தலைவர்கள் வலியுறுத்து

ஷா ஆலம்-
தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி ஓவிய எழுத்து அறிமுகப்படுத்துவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர்களும் முழுமையான கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய சமூகத் இயக்கத் தலைவர் இராசேந்திரன் இராசப்பன் தெரித்தார்.

அது மட்டுமல்லாமல்
நமது தமிழ்ப்பள்ளி, நமது தாய் மொழி, நமது பிள்ளைகளுக்கு நாம் தான் பொருப்பானவர்கள் என்று நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதோடு அந்தந்தப் பள்ளி வளாகத்தில் எதிர்ப்புப் பதாகைகளை  தொங்க விட வேண்டும்
என்பதனை இந்திய சமூக இயக்கத்தின் துணைத் தலைவரான குமரவேல் கூறினார்.

பெற்றோர்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் தாண்டி ஜாவி ஓவிய எழுத்து தமிழ்ப்பள்ளிகளில் ஒருபோதும் நுழையாது என்பதனை ஆணித்தரமாகக் கூறினார் இந்திய சமூக இயக்கச் செயலாளர் கண்மனி.

மேலும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
உடனே ஓர்  அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றும்,
அக்கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் ஜாவி ஓவிய எழுத்து தங்கள் பள்ளிக்கு வேண்டாம் என்ற ஒட்டு மொத்த குரலைத் தீர்மானமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மேலும் ஒவ்வொரு வருடமும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக்கூட்டத்தில் ஒட்டுமொத்தக் குரலுடன் தீர்க்கமான முடிவாக ,
எந்தக் காலகட்டத்திலும் எந்த நிலையிலும்
எங்கள் தமிழ்ப்பள்ளிக்கு ஜாவி ஓவிய எழுத்து வேண்டாம் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முதல் தீர்மானமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் அறம் இயக்கத் தலைவரும் இந்திய சமூக இயக்க தகவல் பிரிவு தலைவருமான நடேசன் வரதன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஜாவி ஓவிய எழுத்தை தமிழ்ப்பள்ளிகளில் முற்றாக
ஒழிக்கும் வரையில் இந்த நகர்வை மலேசியாவில் உள்ள அனைத்து 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் உடனடியாக
அமல்படுத்த வேண்டும் என்று இந்திய சமூக இயக்க மகளிர் தலைவி தேவி உட்பட அனைத்து இந்திய சமூக தலைவர்களும் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment