Tuesday 20 August 2019

முன்பு குலா- இப்போது இராமசாமி; வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார் ஸாகீர் நாய்க்

கோலாலம்பூர்-

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கு விதித்த காலக்கெடு விதித்த மூன்று நாட்களுக்கு பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி உடபட நான்கு பேர் மன்னிப்பு கோருமாறு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்.


பேராசியர் இராமசாமி, கனடாவுக்கான மலேசிய தூதர் டத்தோ டென்னிஸ் இக்னோதியோஸ், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சதீஸ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

சம்பந்தப்பட்ட நால்வருக்கு ஸாகீர் நாய்க்கின் வழக்கறிஞர் அலுவலகம் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளது.

தம்மீது சுமத்தப்பட்ட அவதூறான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு சட்ட நடவடிக்கைகளுக்கான செலவீனத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் தேதி குலசேகரன் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஸாகீர் நாய்க் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment