Sunday 21 April 2019

சாப்பிடுவதை பற்றி பேசுவதை விட உரிமைகளுக்காக குரலெழுப்ப வேண்டும்- கமலநாதன் சாடல்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய உணவகங்களில் உணவருந்துவதை பேசி கொள்வது பெருமை அல்ல. மாறாக இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கப்பதே மக்கள் பிரதிநிதிக்கு அழகானது என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் இந்தியர்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்நிலையில்  மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் தகுதி வாய்ந்த  இந்திய மாணவர்கள் புறக்கணிகப்பட்டுள்ளது சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய இந்திய மாண்புமிகுகள் ஆக்ககரமான திட்டங்களை மேற்கொள்ளாமல் மெளனம் காப்பது இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்திய உணவகங்களில் உணவருந்துவதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் இந்திய அமைச்சர், முதலில் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முனைய வேண்டும்.

இந்தியர் உணவகங்களில் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவொன்றும் பெரிய விவகாரம் அல்ல, இந்தியர்களின் நலனுக்காக் குரல் கொடுப்பதும் போராடுவதுமே தலைவனுக்குரிய தகுதிகள் ஆகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கமலநாதன் குறிப்பிட்டார்.

இதற்கு முன், ரந்தாவ் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது உரையாற்றிய  மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர் உணவகங்களில் மட்டுமே சாப்பிடுவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment