Tuesday 23 April 2019

தொடர் குண்டு வெடிப்பு; புலனாய்வில் களமிறங்குகிறது இன்டர்போல்

வாஷிங்டன்-
தொடர் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற குழுவை அனுப்புவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, பகுப்பாய்வு செய்வது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் டுவிட்டர் பதிவில்  இன்டர்போல் அறிவித்துள்ளது.
"தேவைப்பட்டால் டிஜிட்டல் தடயவியல், பயோமெட்ரிக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் நிபுணர்கள் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆய்வு செய்யும் நபர்களையும் அனுப்புவோம்" என்றும் அது.கூறியுள்ளது.

No comments:

Post a Comment