Wednesday 24 April 2019

மெட்ரிக்குலேஷன் விவகாரம்; 2,200 மாணவர்களுக்கும் கதவுகள் திறக்கப்படுமா? மூடப்படுமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் இன்று எடுக்கப்படும் முடிவை இந்தியர்களை குறிப்பாக தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களை திருப்தி கொள்ள செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் வழங்கப்பட்டன. ஆனால், 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 2018ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி ஒன்றின் மூலமே இந்திய சமுதாயம் மேம்பாடு காண முடியும் என்று ஆளும் அரசாங்கத்தில் பல மாண்புமிகுகள் உணர்ந்திருந்தும் மெட்ரிக்குலேஷன் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் அளவுக்கு ஏன் பொறுமை காத்தனர்?, இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதாக முழங்கிய அமைச்சர்களும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு சிறந்த முறையில் தீர்வு காண தவறியது ஏன்? என்பதே இந்திய சமுதாயத்தின் கேள்வியாக உள்ளது.

மெட்ரிக்குலேஷன் விவகாரத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சிறந்த தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சு கூறியிருந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மெட்ரிகுலேஷன் பயில்வதற்கு 2,200 இந்திய மாணவர்களுக்கும் கதவுகள் திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment