Wednesday 24 April 2019

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு

கொழும்பு-
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியான வௌிநாட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள் எனவும், 6 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 26 பேர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment