Saturday 20 April 2019

சிம்ஸ் இயக்க ஏற்பாட்டில் கே.ஜே.பாபுவின் ‘யா ரஹுமானே’ ஆல்பம் வெளியீடு கண்டது

ரா.தங்கமணி


கோலாலம்பூர், ஏப்.20-

நாட்டின் கலைத்துறையில் நன்கு அறிமுகமான கே.ஜே.பாபுவின் இசையில் மலர்ந்துள்ள ‘யா ரஹுமானே’ ஆல்பம் வெளியீடு அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் எஸ்டபிள்யூ மண்டபத்தில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது.

சஹாபாட் இந்திய முஸ்லீம் செமலேசியா (சிம்ஸ்) ஏற்பாட்டில் கே.ஜே.பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.

சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் ஹாஜி சைட் புஹாரி இந்த ஆல்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
இந்த ஆல்பம் குறித்து பேசிய கே.ஜே.பாபு, இதுநாள் வரை மலேசியக் கலைஞர்களின் முழுமையான பங்கெடுப்பில் இஸ்லாமிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு வெளியீடு கண்டதில்லை.

மலேசியக் கலைஞர்கள் இந்தியாவிலும் இந்தியக் கலைஞர்களின் தயாரிப்பிலான இஸ்லாமிய பாடல் தொகுப்புகளே வெளியீடு கண்டு வந்தன. இப்போதுதான் முதன் முறையாக மலேசியக் கலைஞர்களின் முழு பங்களிப்பில் ‘யா ரஹுமானே’  பாடல் தொகுப்பு வெளியிடப்படுகிறது.

9 பாடல்கள் அடங்கிய இந்த பாடல் தொகுப்புக்கு தாம் இசையமைத்துள்ளதாகவும் ‘இறையருள்’ கவிஞர் சீனி நைனா முகமது, ரஸிடா பேகம் பாடகர் சைட் அலி  உட்பட நானும் பாடலை எழுதியுள்ளேன்.
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் நோக்கில்‘யா ரஹுமானே’  ஆல்பம் மலேசிய கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த பாடல் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு தொழிலதிபர்கள், சமூக ஆரவலர்கள் உட்பட பல்வேறு இந்திய முஸ்லீம் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பாடல் தொகுப்பை வாங்கி ஆதரவு கொடுத்தனர்.

No comments:

Post a Comment